Saturday, August 14, 2010

மந்திரச்சிமிழ் இதழ்- 4

மந்திரச்சிமிழ் இதழ்-4
அன்பார்ந்த வாசகர்களுக்கு,
உலக செம்மொழி மாநாடு சூன் மாதம் மிக அருமையாக நடந்தேறியுள்ளது. சும்மா கிடந்த தமிழை தனது இலக்கியப் பேராற்றல் மூலம் செம்மொழியாக ஆக்கிய பெருமை உலக ஒப்பற்ற தானைத் தலைவர் கலைஞரின் அரும்பெரும் சாதனையை நம்மால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. வந்திருந்த அறிஞர் பெருமக்கள் வாசித்த வாசிப்பில் சிறப்பாக அமைந்திருந்தது மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் வாசிப்புத் தான். “தமிழ் ஆதிக்கம் செலுத்தவது எதிர்த்து மணமேடையிலிருந்து புறப்பட்டு வந்த போராளி கலைஞர்” என்றார்.  தமிழ்நாட்டில் நடந்தேறிய அனைத்து உலக தமிழ் மாநாடுகளுக்கு இணையாகவும், இன்னும் மேலான கீழ்மையுடனும் நடந்தேறியது.
விழாவின் முத்தாய்ப்பாக தமிழ் படைப்புகள் மொழிபெயர்க்க வேண்டுமென்ற தனது ஞானத்தை கலைஞர் வெளியிட்டார். மிகச் சிறப்பான அறிவிப்பு அத்தகையது. தமிழ் நாட்டில் ஆகச்சிறந்த படைப்பாளிகளும், மேதைகளும் குவிந்து கிடக்கிறார்கள். முதலில், கலைஞர், கனிமொழி, வைரமுத்து, வெறிகொண்டான் போன்றவர்களின் ஆற்றல்களை தான் உலகில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும்.
இதழ் வெகுவாக வரவேற்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இவ்வாண்டிற்கான ‘கரிசல் அறக்கட்டளை’ விருதினை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். இதழ் குறித்து நற்சான்று அளித்து, மேலும் ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில் விருதளித்த எழுத்தாளர் கி.ராஜநாரயாணன் அவர்களுக்கும், ஏனையவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பதிப்பாசிரியர்

பொருளடக்கம்
கடல்சிங்கத் திருவிழா                                4
செம்மொழி மாநாடு: நியான் விளக்கும், நீலம்பாரித்த மொழியும்        7
என்னைத் தமிழர் என்று அங்கிகரிப்பீர்களாக                12
இரு நண்பர்கள் (கெய்டே மேப்பேசன்)                    15
கவிதை: முபீன் சாதிகா                            20
கவிதை: -ஹோர்ஹே லூயி போர்ஹேஸ்-                    22
ஆளுமைகள்-அறிமுகங்கள் (லியோ டால்ஸ்டாய்)                23
ஆவணப்பட விமர்சனம்                            26
போபால் பேரழிவு: நீதி என்னும் பெருங்கூத்து                28
உலகமயமாதலின் சீர் குலைவும்
தேசியவாதத்தின் மீள் உருவாக்கமும் - 2                     32
அந்நிய நேரடி முதலீடு: சர்வம் லாபமயம்                    35
கிரிக்கெட்: காலனி ஆதிக்கத்தின் நீட்சி... அடிமைகளின் மோகம்        39
உணர்வுகள் கூடும் காலி இல்லம்-
கிம் கி- டுக்கின் 3- ஐயன்                            43

No comments:

Post a Comment